நரசிம்மனின் கடைசிப் பொழுது




இரண்யனின் வயிறு கிழித்தெறிந்த இரத்தக் கறையோடு
கடற்கரையெங்கும் உலவித் திரிகிறான் நரசிம்மன்
பிடரி முழுக்க நரைத்த மயிர்
மேனியெங்கும் சுருக்கம்
முதுமையால் தடுமாறுகிறது அவன் நடை

கடலென்பது பிரபஞ்சம்
கரையென்பது குட்டித் தீவு
தனித் தீவில் ஒற்றை மிருகமாய்
பசித்தலைகிறான் நரசிம்மன்
வயிறு கிழித்துப் பசியாற
மனிதர்களில்லாத தேசமது

கடற்கரையெங்கும் யாசித்துத் திரிகிறான் நரசிம்மன்
மண் கூடுகளில் உள் நுழைந்து
தாழிட்டுக் கொள்கின்றன குட்டி நண்டுகள்

 நன்றி : உயிர் எழுத்து ஆகஸ்ட் 2008

1 comment:

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

நரசிம்மம் யதார்த்தம். பாராட்டுகள்.