கனவு வெளி
முழுக்க இலவம்பஞ்சு
பிசாசுகளைப்
போல் சூழும் பனி மூட்டம்
பாதம்
நனைக்கும் புல்வெளி
விண்மீன்
பூத்த பூமியில் ஒற்றை மரம்
மரத்தடியில்
காலணிகளைக் கழற்றிவிட்டு
உச்சியிலிருக்கும்
பறவையின் கூட்டில்
உறங்கத்
தொடங்குகிறேன்
பூக்கள் உதிர்ந்து
காலனியை மூடுகின்றன
முட்டையிலிருந்து
வெளியேறிய பறவைக் குஞ்சென
மூடிய
விழிகளுக்குள் கீச்சிடுகிறது கனவு
அனுபவத்திற்கெட்டாத
பெருங்கனவு அது
கலவியைப்
போலவே அலாதியானது கனவு
இரண்டுமே
முற்றாய்க் கழிவதில்லை
அடுத்த
இரவுவரை ஒத்திப் போடப் படுகின்றன
பரந்த
கால வெளியில்
எனது காலணிகளை
யாரோ களவாடி விடுகிறார்கள்
கோடை தொடங்குகிறது
நெடுவழியெங்கும்
பரவுகின்றன
காய்ந்த
நெருஞ்சி முட்கள்
நன்றி: உயிர் எழுத்து ஆகஸ்ட் 2008
No comments:
Post a Comment